Monday, August 23, 2010

கவித... கவித.... கவித ...

புதுசா பதிவு போடுவதால் , ரொம்ப நேரம் முயற்சி செய்து கிறுக்கியவை....  

உன் விழிநீர் கூட இனிக்குமடி - அது
விழுகின்ற இடம் உன் கன்னமாய் இருந்தால் !

என் உதிரம் கூட உரையுமடி,

உன் பார்வை பட்டவுடன்,  

என் உயிர் மட்டும் பிரியுதடி ,

உன்னை காணும் முன்பே !!!! 


என்னை மறந்தேன்
உன்னை கண்டதால், 
என்னை அறிந்தேன்
உன்னை மறந்ததால்   


இரு நதி சங்கமம்,
கிளை நதி ஆரம்பம்!
ஆ - குழந்தை    


இரு மனம் இணையும் மதம் மறைந்தால் ,
இரு மதம் இணைந்தது மனம் கசிந்ததால்!
 

2 comments:

Ramesh said...

நல்லா இருக்குங்க ஸ்ரீ....அப்படியே இதையும் படிச்சு கருத்து சொல்லுங்க..

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_06.html

ஸ்ரீஹரி said...

நன்றி ரமேஷ் !!! உங்கள் பதிவு காண பதில் அங்கே

Post a Comment