Monday, August 23, 2010

இனிது இனிது - ஒரு குழந்தையின் புலம்பல் !!!

நான் விரும்பிய நாட்களை
சற்றே திரும்பி பார்க்கிறேன்,
தனியாக உள்ளத்தில் உணர்வாக !

நான் அவதரித்த நாள் - என்
தாய் பூரித்த நாள் .

பிறக்கும் போதே பட்டம் கொடுத்தவன்
தாய் என்று !

உலகத்தை உணராத வயதில்
உண்மையை உணர்ந்தேன் என் தாய் மடியில்

உலகத்தை உணர்ந்த  போது
பொய்மையை உணர்ந்தேன் எங்கெங்கும் ...

பிழையோடு பேசினேன் ரசித்தார்கள்
அமுத மொழியை அன்று !

பிழையின்றி   பேசுகிறேன் தமிழ் மொழியை
நகைக்கிறார்கள் இன்று ! 

மாற்றம் என்னிடதிலா
உண்மையை மாற்றி பேசும் உலகத்திலா !!


                       ------     தொடரும் ( நீங்கள் விரும்பினால்)

1 comment:

Deenadayalan said...

Good Start... Keep going... Best Wishes...

Post a Comment