நான் விரும்பிய நாட்களை
சற்றே திரும்பி பார்க்கிறேன்,
தனியாக உள்ளத்தில் உணர்வாக !
நான் அவதரித்த நாள் - என்
தாய் பூரித்த நாள் .
பிறக்கும் போதே பட்டம் கொடுத்தவன்
தாய் என்று !
உலகத்தை உணராத வயதில்
உண்மையை உணர்ந்தேன் என் தாய் மடியில்
உலகத்தை உணர்ந்த போது
பொய்மையை உணர்ந்தேன் எங்கெங்கும் ...
பிழையோடு பேசினேன் ரசித்தார்கள்
அமுத மொழியை அன்று !
பிழையின்றி பேசுகிறேன் தமிழ் மொழியை
நகைக்கிறார்கள் இன்று !
மாற்றம் என்னிடதிலா
உண்மையை மாற்றி பேசும் உலகத்திலா !!
------ தொடரும் ( நீங்கள் விரும்பினால்)
1 comment:
Good Start... Keep going... Best Wishes...
Post a Comment